திருச்செந்துார், பழநி கோயில்களில் வைகாசி விசாகம் கோலாகலம்
Added : ஜூன் 03, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Vaikasi Visagam Kolakalam in Tiruchendur and Palani Temples   திருச்செந்துார், பழநி கோயில்களில்  வைகாசி விசாகம் கோலாகலம்

தூத்துக்குடி:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று வைகாசி விசாகத்திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 3:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடந்த சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி

பழநி முருகன் கோயில் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஜூன் 5 வரை நடக்கும் இவ்விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

ஜூன் 1 ல் முத்துக்குமாரசுவாமிக்கு , வள்ளி-தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4:39 மணிக்கு துவங்கியது. வள்ளி, தெய்வானையுடன் சுவாமி எழுந்தருள 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரானது நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்தது. கோயில் யானை கஸ்துாரி தேர் பின்னால் வர மாலை 5:42 மணிக்கு நிலைக்கு வந்தது.இதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடந்தது. கோயில் இணை ஆணையர் பிரகாஷ், டி.எஸ்.பி., சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X