எண்ணும், எழுத்தும்...கண்ணும், கருத்துமாக பயிற்சி: புதிய பாடத்திட்டத்துக்கு தயார்
Added : ஜூன் 03, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Numerical, writing...visual, conceptual training ready for the new curriculum   எண்ணும், எழுத்தும்...கண்ணும், கருத்துமாக பயிற்சி: புதிய பாடத்திட்டத்துக்கு தயார்

தமிழக அரசு துவக்க பள்ளிகளில், புதிய பாடத்திட்ட முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. கடந்தாண்டு 1 முதல் 3ம் வகுப்பு வரை, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதன்படி, துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, இது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டாக புதிய பாடத்திட்டத்தின் வாயிலாக, 1 முதல், 3ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.

தற்போது நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகளுக்கு, அரசு புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் நான்கு, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு, புதிய பாடத்திட்டம் குறித்த, 'எண்ணும், எழுத்தும்' பயிற்சி வகுப்பு, மேட்டுப்பாளையம், காரமடையில் நடக்கிறது.

மேட்டுப்பாளையம் வள்ளுவர் துவக்கப்பள்ளியில், பயிற்சி வகுப்பை, காரமடை வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மைதிலி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளித்து வருகின்றனர்.



எளிய முறை பாடம்




இப்பயிற்சியில் காரமடை ஒன்றியத்தில் உள்ள, 123 பள்ளிகளில் இருந்து, 169 தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு பாடங்களை சொல்லிக் கொடுப்பது. மாணவர்களை செய்முறை கையேட்டில் (ஒர்க் புக்) எழுத வைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

காரமடை கன்னார்பாளையம் துவக்கப்பள்ளியில், இதே போன்று, ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், கையேடு நோட்டுகள் வந்துள்ளன. மூன்று நாட்கள் பயிற்சி முடிந்து செல்லும் ஆசிரியர்களுக்கு, பயிற்சி கையேடு, புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளி திறக்கும் நாள் அன்று, அனைத்து மாணவர்களுக்கும், புத்தகங்கள் பயிற்சி கையேடு நோட்டுகள் வழங்கப்படும்.- கிருஷ்ணமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர், காரமடை

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X