அன்னுார்;பி.டி.ஓ., துணை பி.டி.ஓ., என 25 பேருக்கு ஒரே நாளில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய துணை பி.டி.ஓ., ரேவதி, பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு பெற்று, அதே ஒன்றியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு உதவியாளர் சாந்தி, பெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் சூர்யா ராஜ், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய கணக்கர் உமா சங்கர் ஆகியோருக்கு துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஊர்நல அலுவலர், காசாளர் ஆகிய பணியிடங்களில் பணிபுரிந்து வந்த 20 பேருக்கு, உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் 25 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.