சுற்றுச்சுவர் அமைக்ககோரிக்கைகரூர்,-ராயனுார் ஊராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனுாரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே கூடுதல் பள்ளி வளாகம் கட்டப்பட்டு அந்த கட்டடத்திலும் ஏராளமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், பாதுகாப்பற்ற சூழலில் ஏராளமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கூடுதல் பள்ளி வளாகத்தை சுற்றிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைக்கு தீ வைப்புவாகன ஓட்டிகள் அவதிகரூர்,-சாலையோரம், குப்பையை தீயிட்டு கொளுத்துவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். புகையால் டூவீலர்கள் மோதி விபத்து நடக்கும் இடமாக மாறி வருகிறது. கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் மண்மங்கலம் அருகே சாலையோரம் சேகரிக்கப்படும் குப்பை ஆங்காங்கே கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக வெளியேறும் புகையினால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுபோன்ற சாலையில் பல இடங்களில் நடந்து வருகிறது. இதன் காரணமாக இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்படும் குப்பையை தீயிட்டு கொளுத்துவதை தடுக்க வேண்டும். அதேபோல், கோழி கழிவு, இறைச்சி கழிவு போன்றவற்றை கொட்டுவதால் துர்நாற்றம் காரணமாக சாலையில் செல்வோர் மூக்கை மூடியபடி செல்கின்றனர். மேலும் பல்வேறு நோய் தொற்று பரவும் நிலை உருவாகி உள்ளது. இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.