கடலூரில் பராமரிப்பின்றி பூங்காக்கள் வீணாகும் அவலம்! பொழுது போக்க இடமின்றி பொதுமக்கள் தவிப்பு
Added : ஜூன் 03, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Parks in Cuddalore go to waste without maintenance! People suffer without entertainment  கடலூரில் பராமரிப்பின்றி பூங்காக்கள் வீணாகும் அவலம்! பொழுது போக்க இடமின்றி பொதுமக்கள் தவிப்பு

கடலுார்,: கடலுார் மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பின்றி வீணாகியுள்ளதால், பொழுது போக்க இடமின்றி பொதுமக்களும், விளையாட இடமின்றி குழந்தைகளும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலுார் மாநகராட்சியில் பொதுமக்கள் குழந்தைகளுடன் பொழுது போக்கவும், பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வாக அமர்ந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சுப்ராயலு ரெட்டியார் பூங்கா மற்றும் வில்வநகர், வரதராஜன் பிள்ளை நகர், முதுநகர் உட்பட 13 இடங்களில் பெரிய அளவில் பூங்காக்கள் உள்ளது.

கடலுார் மாநகர மக்களுக்கு சில்வர் பீச் தவிர, பெரிய அளவில் பொழுது போக்கு அம்சங்கள் இல்லை. இந்நிலையில், அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் முறையான பராமரிப்பின்றி பெரும்பாலான பூங்காக்கள் பயன்பாடில்லாமல் உள்ளது.

கடலுார் நகரின் மைய பகுதியில் பாரதி சாலையில் விஸ்தாரமான பரப்பளவில் சுப்ராயலு ரெட்டியார் பூங்கா உள்ளது. இங்கு நடை பாதை, சிறுவர்கள் விளையாட விதவிதமான விளையாட்டு சாதனங்கள், நீர் வீழ்ச்சி, பிரகாசமூட்டும் விளக்குகள் என, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இப்பூங்கா உள்ளது.

கோடை விடுமுறையையொட்டி, இங்கு, தினமும் அதிக அளவில் பொதுமக்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடன் வந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்துவிட்டு செல்கின்றனர். பராமரிப்புக்கென நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், முறையாக பராமரிக்கப்படாமல், பூங்கா முழுமையாக சேதமாகியுள்ளது. நடைபாதை சிலாப்புகள் உடைந்து சேதமாகியுள்ளது. சிறுவர் விளையாட்டு உபகரங்கள் அத்தனையும் வீணாகி, பூங்கா ஒப்புக்கென உள்ளது.

இதனால், அங்கு வரும் சிறுவர், சிறுமியர் உடைந்த விளையாட்டு உபகரணங்களில் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். புல்தரைகள் காய்ந்து மைதானம் போல் காட்சியளிக்கிறது.

விளக்கு வெளிச்சமும் போதுமான அளவில் இல்லை. செடி கொடிகள் முளைத்து புதர் போல் காட்சி அளிப்பதால் குழந்தைகளை அழைத்து வருவதற்கு பொதுமக்கள் தயங்குகின்றனர்.

இதனால் பொதுமக்கள் வருகை முற்றிலும் குறைந்துவிட்ட நிலையில், காதலர்கள் பூங்காவாக மாறியுள்ளது. காலை முதல் மாலை வரையில் காதலர்கள் பூங்காவை ஆக்கிரமித்து கொள்கின்றனர்.

இவர்கள், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில், நடந்து கொள்கின்றனர்.

இதே போல், கடலுார் மாநகராட்சியில் உள்ள பெரும்பலான பூங்காக்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.

எனவே, கடலுார் மாநகராட்சியில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக இருந்துவரும் சுப்ராயலு ரெட்டியார் பூங்கா உள்ளிட்ட சேதமடைந்துள்ள பூக்காக்களை முழுமையாக சீரமைத்து, மீண்டும் புதுப்பொலிவு பெற செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X