எப்போது துவங்கும் மதுரை விமான நிலைய விரிவாக்கம்
Added : ஜூன் 03, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு பலமாதங்களாகியும் பணிகள் துவங்குவது தாமதமாகிறது.

மதுரை விமான நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 500 ஏக்கருக்கும் மேல் உள்ள இந்த நிலையத்தை காலத்தேவைக்கேற்ப விரிவுபடுத்துவது இன்றியமையாதது. சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டிய கட்டத்தில், பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் ரன்வேயின் நீளத்தை அதிகரிப்பது தேவையாகிறது. இதையடுத்து தமிழக அரசு சொந்த செலவில் ரூ.200 கோடி ஒதுக்கி 633 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

சின்ன உடைப்பு, பாப்பனோடை, ராமன்குளம், பெருங்குடி, அயன்பாப்பாக்குடி, குசவன்குண்டு கிராமங்களைச் சேர்ந்த நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்து ஓராண்டுக்கும் மேலாகிறது. இந்நிலையில் புதிய டெர்மினல் அமைக்கும் பணியும், ரூ.35 கோடிக்கு 15 கி.மீ.,க்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியும் துவங்கியது.

ஆனால் ரன்வேயின் நீளத்தை அதிகரிக்கும் பணிமட்டும் தாமதமாகியது. ரன்வேயின் நீளத்தை அதிகரித்தால் தற்போதுள்ள மதுரை - கப்பலுார் ரிங்ரோடு துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் இந்த ரோட்டை 'அண்டர்பாஸ்' ஆக அமைக்கலாமா என ஆலோசித்தனர். அதற்கு ரூ.500 கோடிக்கும் மேல் ஆகும் என்று மதிப்பீடு செய்ததால், அந்த யோசனை கைவிடப்பட்டது.

அதற்கு பதிலாக தனியார் மருத்துவ கல்லுாரி அருகே துவங்கி அருப்புக்கோட்டை ரோட்டில் வலையங்குளம் வரை 15 கி.மீ.,க்கு ரிங்ரோடு மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்த ரோடு அமைவதிலும் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.தாமதமாகிறது. ஏனெனில், கையகப்படுத்திய பகுதியில் அயன்பாப்பாக்குடியில் 43 ஏக்கர் குளம், குசவன்குண்டு கிராமத்தில் 34 ஏக்கர் குளம் உள்ளது.

இந்த நீராதாரங்களுக்கு சேதாரமின்றி கட்டுமானங்களை அமைக்க வேண்டும் என்பதால் ரன்வேயை எவ்வாறு அமைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அயன்பாப்பாக்குடியின் 43 ஏக்கர் குளம் மட்டுமின்றி, அதற்கான பாசனபரப்பு முழுவதும் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் பிரச்னை இல்லை.

அதேசமயம் குசவன் குண்டு கிராமத்தில் கையகப்படுத்திய 34 ஏக்கர் போக மீதி 40 ஏக்கர் அளவுக்கு குளம் உள்ளது. இங்கு வயல்வெளி பகுதி முழுவதும் கையகப்படுத்தப்படவில்லை என்பதால் அவற்றுக்கு நீர்நிலை தேவை உள்ளது.

எனவே இப்பிரச்னையில் நீராதாரத்தின் தன்மையை மாற்றாமல் எப்படி பிரச்னைக்கு தீர்வு காண்பது என தலைமைச் செயலர் அளவில் மாதந்தோறும் காணொலி காட்சியில் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். என்றாலும் தீர்வு கிடைத்தபாடில்லை. இதனால் நிலம் கையகப்படுத்தி ஒப்படைத்த பின்னும், ரன்வே பணிகள் தாமதமாகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X