20 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் சுற்றி வளைத்த கடலோர காவல்படை
Added : ஜூன் 03, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
20 crore gold smuggling busted by Coast Guard   20 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் சுற்றி வளைத்த கடலோர காவல்படை

ராமநாதபுரம்: இந்தியாவுக்கு கடல் வழியே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட, 20.20 கோடி ரூபாய் மதிப்பிலான 32.87 கிலோ தங்கத்தை, இந்திய கடலோர காவல் படை மற்றும் வருவாய் புலனாய்வு துறை நடத்திய கூட்டு நடவடிக்கையில் பறிமுதல் செய்தனர். அத்துடன், இந்த கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா-இலங்கை கடல் எல்லையில் இருக்கும், மன்னார் வளைகுடா பகுதி மூலம் இந்தியாவுக்குள் தங்கம் சட்டவிரோதமாககடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை, இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து, வருவாய் புலனாய்வு துறை,கடலோர காவல் படையுடன் ஒன்றிணைந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ராமநாதபுரம் மண்டபம் துறைமுகத்தை நோக்கிசந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு ஒன்று வந்தது. இதை சோதனை செய்ய முற்பட்ட போது,படகில் இருந்தவர்கள் பதுக்கப்பட்டதங்கக்கட்டிகளைகடலில் வீசிவிட்டு,தப்ப முயன்றனர். இந்த படகை துரத்திப் பிடித்த இந்திய கடலோர காவல்படை, அதில் இருந்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும், கடலில் வீசப்பட்ட 11.60 கிலோதங்கக்கட்டிகள், 2 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்டன.

அதே, மற்றொரு சம்பவத்தில்,தெற்கு மண்டபம் பகுதியில் உள்ள விடலை கிராமத்தை நோக்கி சந்தேகத்திற்குகிடமான இன்னொரு மீன்பிடி படகு வந்தது. இந்த படகை மடக்கி, வருவாய் புலனாய்வு துறை சோதனை செய்தனர். இதில், பதுக்கி வைக்கப்பட்ட 21.27 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

மொத்தம், பரிமுதல் செய்யப்பட்ட 32.87 கிலோ தங்கம் உட்பட கைது செய்யப்பட்ட ஐந்துநபர்கள் அனைவரும், அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக வருவாய் புலனாய்வு துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X