அரசு பணி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி
Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

விருதுநகர்:மின்வாரியத்தில் உதவிபொறியாளர் பணி வாங்கி தருவதாக, 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐந்து பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார், 28; பி.டெக்., பட்டதாரி. இவருக்கு, சிவகாசி சித்துராஜபுரத்தைச் சேர்ந்த பிரபுகண்ணன், 2019ல் அறிமுகமானார்.

இவர், நண்பர் அய்யப்பன் மூலம் அரசு பள்ளியில் உதவியாளர் பணிக்கு பணம் கட்டி சேர்ந்ததாக கூறினார்.

தற்போது சென்னையில் வசிக்கும் அய்யப்பன், அவரது மகன் விஷ்ணு, மருமகன் அருண்குமாருக்கு அரசு துறை உயர் அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் உள்ளதாகவும், அவர்கள் மூலம் பல நபர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

நம்பிய கார்த்திக்குமார், தனக்கும் அரசு வேலை வாங்கித் தரும்படி கூறினார்.

சிவகாசி சித்துராஜபுரத்தில் உள்ள அய்யப்பனின் வீட்டுக்கு வரச்சொல்லி, 20 லட்சம் ரூபாய் தந்தால் மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பணி வாங்கித் தருவதாக விஷ்ணு, அருண்குமார் கூறினர்.

ஒப்புக் கொண்ட கார்த்திக், சென்னை சென்று தேர்வு எழுதினார். 'பணி நியமன ஆணை தயாராக உள்ளது. வங்கி கணக்கில் பணம் செலுத்தி அதை பெற்றுக் கொள்ளலாம்' என, பிரபுகண்ணன் கூறியதையடுத்து, கார்த்திக்குமார் 14 லட்சம் ரூபாயை அனுப்பினார்.

ஆனால், வேலை வாங்கித் தராமல் மோசடி செய்தனர். இது குறித்த புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பிரபுகண்ணன், அய்யப்பன், அவரது மனைவி மாலா, மகன் விஷ்ணு, மருமகன் அருண்குமார் ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X