பழ மரக்கன்று வளருங்கள், விவசாயிகளே!
Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

'அப்பா தந்தார் ஆரஞ்சு அம்மா தந்தார் ஆப்பிள்

அண்ணன் தந்தான் அன்னாசி

அக்காள் தந்தாள் வாழைப்பழம்

தாத்தா தந்தார் திராட்சை

பாட்டி தந்தார் பலாப்பழம்

அத்தை தந்தார் மாதுளை

மாமா தந்தார் மாம்பழம்''

குழந்தைகளுக்கான பாடல் என்றாலும், பழங்கள், சத்தான வளங்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இது அமைந்துள்ளது. பழ மரங்கள் வளர்ப்பு என்பது திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை குறைவுதான்.

கிராமங்களில் பழ மரக்கன்று வளர்க்கும் திட்டத்தில் இணைந்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:

திருப்பூர் மாவட்டத்தில், தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை வாயிலாக அனைத்து வட்டாரங்களிலும், அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டங்களின் கீழ், பழ மரக்கன்று தொகுப்பு வழங்கப்படுகிறது.

இருநுாறு ரூபாய் மதிப்புள்ள பழ மரக்கன்று தொகுப்பு, பயனாளிகளுக்கு, 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, மாதுளை என, 5 வகையான பழ மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில், 2023 - 24ம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ள, 52 கிராமங்களுக்கு மட்டும், 15 ஆயிரத்து 600 பழ மரக்கன்று தொகுப்பு வழங்க, 23.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களுக்கும் பழ மரக்கன்று வழங்க, 13.75 லட்சம் ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் பயன் பெற, விவசாயிகள், தங்கள் விவரங்களை, www.tnhorticulture.tn.gov.in/kitஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X