செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். அவலை, 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும், போண்டா போல் உருண்டை பிடித்து தனியாக வைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றிச் சூடானதும் அதில் அவல் போண்டா உருண்டையை சூடான எண்ணெயில், போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, அல்லது தக்காளி சாஸ் இருந்தால் ஸ்நாக்ஸ்சூப்பராக இருக்கும்.