துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் பெண்ணாடத்தில் விசாரணை
Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Cleanliness Staff Commission Chairman Pannadam probe   துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் பெண்ணாடத்தில் விசாரணை



பெண்ணாடம்-பெண்ணாடத்தில் கழிவு நீர் கால்வாய் துார் வாரும் போது, துப்புரவு பணியாளர் இறந்தது குறித்து தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் விசாரணை நடத்தினார்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் சோழன் நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு, 40; பெண்ணாடம் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்தார்.

கடந்த மாதம் 19ம் தேதி, பாபு மற்றும் சிலர் சிலுப்பனுார் சாலை பகுதியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாபுவிற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 24ம் தேதி இறந்தார்.

பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில், போதிய பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல், கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியதாக, தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணையத்திற்கு புகார் சென்றது.

அதன்பேரில், தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று பாபு இறப்பு குறித்து விசாரணை நடத்தினார். பாபுவுடன் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர், பேரூராட்சி செயல் அலுவலர், முதலுதவி அளித்த பெண்ணாடம் தனியார் மருத்துவமனை டாக்டர், பாபுவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது;

கழிவுநீர் வாய்க்காலில் மனிதர்கள் இறங்கி வேலை பார்க்கக் கூடாது. பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பாபு பணியில் ஈடுபட்டுள்ளார். யார் அவரை வேலை செய்ய சொன்னார்களோ அவர்கள் மீது வழக்குப் பதியப்படும். பிரேத பரிசோதனை முடிவு வந்தால் தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

வேலையின் போது ஏற்பட்ட பாதிப்பால் தான் பாபு இறந்தார் என தெரியவந்தால், பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது, கையால் துப்புரவாளர்கள் பணி செய்வதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் - 2013ன் படி, (எம்.எஸ்., ஆக்ட்) உரிய இழப்பீடு பெற்று தருவோம். இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சுய உதவிக்குழு மூலம் பணிபுரிபவர்களுக்கு கால்வாய் சுத்தம் செய்யும் பணி வழங்கக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடலுார் கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி., ராஜாராம் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X