கோவிலில் திருட முயற்சி: பெண்ணாடத்தில் பரபரப்பு
Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 Attempt to steal from a temple: Sensation in Pannaadam   கோவிலில் திருட முயற்சி: பெண்ணாடத்தில் பரபரப்பு



பெண்ணாடம்-பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில், நள்ளிரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கையை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கும் பணி, நடந்து வருகிறது.

வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் நடை மூடப்பட்டு, கோவில் பணியாளர்கள் வீட்டிற்கு சென்றனர். கோவில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் முன் மண்டபம் அருகே உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர். அவர்களில் சிலர் மாடியில் துாங்கினர்.

நள்ளிரவு 1:00 மணியளவில் மர்ம நபர் இருவர் அம்மன் கோவில் முன் மண்டபம் பகுதியில் உள்ள 20 அடி உயரம் கொண்ட மதில் சுவரில் நடந்து சென்றனர். இதை பார்த்த தொழிலாளிகள் கோவில் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

கோவில் பணியாளர்கள் வந்து பார்த்தபோது பிரளயகாலேஸ்வரர், அம்மன் சன்னதியில் இருந்த உண்டியலின் ஒரு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

மற்றொரு பூட்டை உடைக்க முடியாததால் காணிக்கை திருடு போகவில்லை. பின்னர் கோவிலுக்குள் பதுங்கி இருந்த 2 மர்ம நபர்களை போலீசார் உதவியுடன் பணியாளர்கள் துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் இருவரும் தப்பிச் சென்றனர்.

தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



புரியாத புதிர்

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்குள் வெளி பகுதியில் இருந்து உள்ளே ஏறி வர முடியுமே தவிர, உள்ளே இருந்து வெளியே செல்வது சிரமம்.ஆனால் மர்ம நபர்கள் மட்டும் எப்படி சென்றனர் என தெரியவில்லை. ஒருவேளை நந்தவனம் பகுதியில் இரவு முழுவதும் பதுங்கி இருந்து அதிகாலை கோவில் திறந்தபின் வெளியே சென்றிருக்கலாம்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X