செஞ்சி-ஜெயங்கொண்டான் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளால் சுற்றுச்சூழல் பாதிக்படுவதாக கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மது வாங்குபவர்கள் அருகில் உள்ள ஏரியிலும், விவசாய நிலங்களிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
பின்னர் மது பாட்டில்களை அங்கேயே உடைக்கின்றனர். பிளாஸ்டிக் டம்ளர்களை அதே இடத்தில் வீசிச் செல்கின்றனர். இதனால் கிராமத்தில் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஊரின் மத்தியிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை 11:30 மணியளவில், டாஸ்மாக் கடை முன்பு திரண்டு கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 3 மாதங்களுக்குள் 2 டாஸ்மாக் கடைகளும் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மதியம் 1:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.