மாவட்டத்தில் ரூ.6,722 கோடி கடன் இலக்கு வங்கியாளர்கள் கூட்டத்தில் தகவல்
Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
6,722 crore loan target in the district informed in the meeting of bankers   மாவட்டத்தில் ரூ.6,722 கோடி கடன் இலக்கு வங்கியாளர்கள் கூட்டத்தில் தகவல்



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டில் ரூ. 6,722.22 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வங்கியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் அனைத்து வங்கியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரி சங்கர்ராவ், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாட்கோ மேலாளர் அனந்தமோகன், நபார்டு வங்கி மேலாளர் பாலகிருஷ்ணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் தினகர் ராஜ்குமார் உட்பட அனைத்து மாவட்ட வங்கி பொது மேலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்த ஆண்டு ரூ.6,722. 27 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாய கடன் ரூ.5,962.66 கோடி. நடுத்தர சிறு, குறு தொழில் கடன் ரூ.641.17 கோடி. இதர முன்னுரிமை கடன்கள் ரூ.118.44 கோடி என, தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, வங்கியாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட தொழில் மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தாட்கோ திட்டங்கள் மற்றும் மகளிர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கடன் விண்ணப்பங்கள் தொடர்பாக வங்கி வாரியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு வங்கியாளர்கள் முன்னுரிமை கொடுத்து, அனைத்து விண்ணப்பங்களுக்கும் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் கணக்குகளை புதிப்பித்து, ஊதியத்தை உடனடியாக வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

இப்பணியை மேற்கொள்ள வங்கி கணக்குடன், ஆதார் எண் இணைக்கும் பணியை ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X