நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாமல் காலம் கடத்தும் அதிகாரிகள்
Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Officials who spend time without removing encroachment on water bodies   நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாமல் காலம் கடத்தும் அதிகாரிகள்



சோழவந்தான் : சோழவந்தான் அருகே மேலக்காலில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் காலம் கடத்தி வருவதால், விவசாயிகள் அல்லல்படுகின்றனர்.

இப்பகுதி அய்யாச்சாமி ஓடை ஆக்கிரமிப்பால் சுருங்கி வாய்க்கால் போல மாறியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற கொடிமங்கலம் கிராம வனப் பாதுகாப்பு குழுத் தலைவர் சாந்தி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, கடந்த 2020ல் வாடிப்பட்டி தாசில்தாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்னும் அதிகாரிகள் 3 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பை அகற்றாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைக்கின்றனர்.

விவசாயி கணேசன்: நீரோடையின் கரை வழியே நாகமலை அடிவார பகுதி வரை நடந்து செல்லலாம். தற்போது நீரோடையை சிலர் ஆக்கிரமித்துள்ளதால்அப்படி செல்ல இயலவில்லை. இதனால் 2 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கிறோம். தற்போது நீர்வரத்து இன்றி வாய்க்கால், கிணறு, குளம் உள்ளிட்டவை வறண்டு கிடக்கின்றன, என்றார்.

கிராம வனப் பாதுகாப்பு குழுத் தலைவர் சாந்தி: ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இவ்வழக்கை விசாரித்தும், வருவாய்த்துறை சர்வே செய்தும், ஆக்கிரமிப்பு உள்ளதை உறுதி செய்து அகற்றும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
04-ஜூன்-202317:54:00 IST Report Abuse
M.chinna thambi உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X