பல்கலை நிர்வாகங்களில் அமைச்சர்கள் தலையீடு அபத்தம்!
Updated : ஜூன் 04, 2023 | Added : ஜூன் 04, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கோவை: பல்கலைகள் தன்னாட்சி அதிகாரம் படைத்தவை, துணைவேந்தர்கள் சட்டரீதியாக நியமிக்கப்படுபவர்கள்; மாநில தலைமை செயலர்களுக்கு இணையான நிலையில் இருப்பவர்கள். ஆனால், கீழ்நிலை அரசு அலுவலர்களை போல் அமைச்சர்கள் சிலரால் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், முதல்வர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்கலை சிண்டிகேட், செனட் கூட்ட முடிவுகள், துணைவேந்தர் செயல்பாடுகள், பல்கலை நிர்வாக முடிவுகளில் அமைச்சர்கள் தலையீடு அதிகரிப்பதாக, பல்வேறு தரப்பில் புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.



latest tamil news



கண்டிக்கத்தக்கது




இதுகுறித்து, கல்வியாளர் பாலகுருசாமி கூறியதாவது:
உயர்கல்வித்துறையின் மேலிடத்தில் உள்ள அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள், மிகவும் கண்டிக்கத்தக்கவை.

பல்கலையின் விதிமுறைகள், நடைமுறைகள், கல்வியாளர்களை உரிய முறையில் மதிப்பதில்லை. துணைவேந்தர்கள் கீழ்நிலை அரசு அலுவலர்களை போல் நடத்தப்படுகின்றனர்.
பல்கலைகள் தன்னாட்சி அதிகாரம் படைத்தவை என்பதையும், அரசின் துறைகள் அல்ல என்பதையும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

துணைவேந்தர்களின் செயல்பாடுகளும், முடிவுகளும் சிண்டிகேட், செனட் போன்ற கல்வி அமைப்புகளின் ஆய்வுக்கு மட்டுமே உட்பட்டவை. கல்வி அமைச்சர் மற்றும் அவரது செயலர் ஆகியோருக்குக் கட்டுப்பட்டவை அல்ல.
பல்கலையின் சிண்டிகேட் ஒப்புதல் அளிக்கும், எந்த தீர்மானம் குறித்தும், நீதிமன்றத்தை அணுக இயலுமே தவிர, அமைச்சர்கள் கேள்வி எழுப்ப இயலாது.

பல்கலையின் அடிப்படை செயல்பாடுகளுக்கு கூட, அமைச்சர்கள் உத்தரவிடுவது துரதிஷ்டவசமானது. இது பல்கலை தன்னாட்சி அதிகாரத்துக்கும், துணைவேந்தர், சிண்டிகேட், செனட் குழுக்களின் அதிகாரங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
துணைவேந்தர் பங்கேற்ற ஒரு கூட்டத்தில், யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இதர தேசிய அளவிலான கல்வி அமைப்புகளின் உத்தரவுகளை செயல்படுத்தவேண்டாம் என, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆணையிடுகிறார்; இது முற்றிலும் அபத்தமானதும், தேவையற்றதாகும்.

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், தேசிய ஒழுங்குமுறை ஆணையகங்களின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டவை. சிண்டிகேட் ஒப்புதல் அளிக்கும் முடிவுகளை, துணைவேந்தர்கள் செயல்படுத்தவேண்டாம் என உத்தரவிடப்படுகிறது.
சிண்டிகேட் அமைப்புகளில், அரசுத் துறைச் செயலர்கள் பலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதையும், சிண்டிகேட் எடுக்கும் முடிவுகளில் அவர்களுக்கும் பங்கு இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள், தங்கள் உத்தரவைப் பின்பற்றாமல் இருக்கும் சில துணைவேந்தர்களை, தொலைபேசியில் அழைத்து கடுமையாக வசைபாடுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க கீழ்த்தரமான செயல்.
துணைவேந்தர் அலுவலகத்தில், அமைச்சர் படங்கள் வைக்க வேண்டும் என்ற உத்தரவிட்டு இருப்பது, அதிர்ச்சியானது மட்டுமின்றி அவலமானதும் கூட.

தற்போது உயர்கல்வித்துறைக்கு, நேர்மை நிறைந்த, உறுதியான, அர்ப்பணிப்பு கொண்ட நபர் தலைமை வகிக்க வேண்டும். அப்போதுதான், தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.



அடிப்பவர்களை அனுசரிக்கணுமாம்!




''அண்மையில் நடந்த, துணைவேந்தர்களின் கூட்டத்தில், 'புதிய தலைமுறை மாணவர்கள் சில சமயம் ஆசிரியர்களை அடிக்கக் கூடும் என்றாலும், அத்தகைய மாணவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்றும், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும்' கூறப்பட்டுள்ளது. கற்றறிந்த கல்வியாளர்களுக்கு, எத்தகைய வெட்கக் கேடான அறிவுரை இது! இத்தகைய அறிவுரை சொல்வோர் எத்தகைய முன்மாதிரியாக இருக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியே,'' என்று சாடியுள்ளார் பாலகுருசாமி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
sankar - Nellai,இந்தியா
04-ஜூன்-202320:59:56 IST Report Abuse
sankar ''அண்மையில் நடந்த, துணைவேந்தர்களின் கூட்டத்தில், 'புதிய தலைமுறை மாணவர்கள் சில சமயம் ஆசிரியர்களை அடிக்கக் கூடும் என்றாலும், அத்தகைய மாணவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும்"- சொன்னவர் சின்னவரின் சின்னவரா - சிறப்பு
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
04-ஜூன்-202318:35:30 IST Report Abuse
r.sundaram இந்த அமைச்சர்கள் எப்படி பட்டம் பெற்றார்கள் என்பது ஆராச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு சுய ஆட்சி பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதுகூட தெரியாது போலிருக்கிறது. இது ஒருபுறம் என்றால், இந்த மாதிரி அமைச்சர்களின் உத்தரவை ஏன் ஏற்கிறார்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள்? விஷயத்தை நேரடியாக வேந்தருக்கு (ஆளுநருக்கு) தெரியப்படுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு இல்லையா? அப்படி ஒரு காரியமும் இத்தகைய அமைச்சர்களை எதிர்த்து செய்ய மாட்டேன் என்றால், இவர்கள் துணை வேந்தர்களாக இருக்கு அருகதை உடையவர்களா? இன்த கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
04-ஜூன்-202318:32:11 IST Report Abuse
T.Senthilsigamani இதில் துணைவேந்தர்கள் பலரும் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுவதுவும் உண்டு .மொத்தத்தில் கல்வியை வியாபாரமாக்கியது தான் திராவிட அரசுகளின் சாதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X