திருப்பூர்;அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மின் னணு நீருந்து கருவியை பொருத்தி, குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட அளவிலான, குடிநீர் திட்டம் மற்றும் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந் தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், உதவி இயக்குனர் (ஊ) ஜெகதீசன் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பேசியதாவது:
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரியம் ஒதுக்கீடு செய்யும் குடிநீர் அளவை கண்காணிக்க, உள்ளாட்சி அமைப்புகளில் பெறும் தண்ணீரின் அளவுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், தண்ணீரை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் என, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மின்னணு நீர் உந்து கருவியை பொருத்தி, குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.