அபராதம் வசூலிப்பதே ஒரே இலக்கு போக்குவரத்து போலீசாரால் தி.நகரில் அவதி
Added : ஜூன் 05, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

தி.நகர்:போக்குவரத்தை முறைப்படுத்தாமல், உயரதிகாரிகளின் 'அழுத்தம்' எனும் பெயரில், அபராதம் வசூலிப்பதையே இலக்காக வைத்து செயல்படும் தி.நகர் போக்குவரத்து போலீசாரால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

'மடக்கி பிடிக்கிறேன்' என்ற பெயரில், சாலையின் குறுக்கே திடீரென புகும் இவர்களால், பெண்கள் முதியோர் விபத்தில் சிக்குகின்றனர்.

போக்குவரத்து போலீசார் வெயில் மழை பாராமல், மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர். அதில் பணியாற்றும் பெரும்பாலான போலீசார், பொதுமக்களிடம் நல்ல உறவையும் பேணி வருகின்றனர்.

ஆனால், -தி.நகரில் துரைசாமி சாலையில், சுரங்கப்பாதையை ஒட்டி வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், அபராதம் வசூலிப்பதையே இலக்காக வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, தி.நகர் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சென்னையின் வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது. தற்போதைய வளர்ச்சிக்கும், மக்கள் தொகைக்கும் ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை.

குறிப்பாக, எந்நேரமும் போக்குவரத்து அதிகம் உள்ள தி.நகர் துரைசாமி சாலையில் வணிக வளாகங்கள், பிரியாணி கடைகளுக்கு வரும் நபர்கள், அத்துமீறி வாகனங்களை விருப்பம் போல் ஆங்காங்கே நிறுத்துகின்றனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.

மாறாக, சுரங்கப்பாதையின் மறு கரையில், வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். நான்கு பேர் நின்றாலே போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவிலான குறுகிய சாலையில், போக்குவரத்து போலீசார் குழுவாக சோதனையில் ஈடுபடுகின்றனர்.

திடீரென சாலையின் குறுக்கே புகுந்து, வாகன ஓட்டிகளை மடக்க முயலுகின்றனர்.

இதனால், சம்பந்தப்பட்டவர் பதற்றத்தில் வாகனத்தை அதிவேகமாக இயக்க முயல்வதாலோ அல்லது திடீரென 'பிரேக்' போடுவதாலோ, பிற வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.

சமீபத்தில் கூட, முதியவர் ஒருவர் இங்கே கீழே விழுந்தார். இதை கண்டுகொள்ளாத போலீசார், அபராதம் விதிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

இதுமட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளை மடக்கி, விசாரிப்பது போல விசாரித்து அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால், ஓரிரு நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக, 1,000 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்பட்டதாக, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது.

எதற்காக அபராதம் என்பது கூட தெரியாமல், வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.

இது ஒருவிதத்தில் வழிப்பறிக்கு சமம் என, மக்கள் புலம்புகின்றனர்.

அத்துடன், விதிமீறும் வாகன ஓட்டிகளாலும், போக்குவரத்து போலீசாராலும் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கேள்வி கேட்டால், உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக இலக்கு நிர்ணயித்து அபராதம் விதிப்பதாக, போக்குவரத்து போலீசார் நழுவி விடுகின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X