'வனத்துக்குள் திருப்பூர் - 9' துவக்கம்: 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Vanatukhin Tirupur - 9 was launched with a target of planting 2 lakh saplings   'வனத்துக்குள் திருப்பூர் - 9' துவக்கம்: 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

திருப்பூர்:மேலும் இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் 'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டம் நேற்று துவங்கப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 2015 முதல், எட்டு ஆண்டுகளில், 15.85 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. மேலும் இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், ஒன்பதாவது திட்டம் துவக்க விழா நேற்று, திருப்பூர் அடுத்துள்ள சோளிபாளையத்தில் நடந்தது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு, 'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டத்தை துவக்கி வைத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார்துரைசாமி வரவேற்றார். திட்ட இயக்குனர்கள் சிவராம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர், திட்டத்தை விளக்கி பேசினர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் பேசுகையில், ''எட்டு ஆண்டுகளில், 15.85 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளது, திருப்பூரின் மாபெரும் சாதனை; மரம் வளர்ப்பு என்பது அறப்பண்பு. தமிழ்க் கலாச்சாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பல்லுயிர் ஓம்புதலும் சிறப்பாக இருந்துள்ளது.

''தனிமனித ஒழுக்கமும், கட்டுப்பாடும், தார்மீக பொறுப்புகள் தான், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கை கொடுக்கும். ஒவ்வொரு நபரும், தமக்கான கடமை, பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

''வழக்கமாக, 'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' என்ற பெயர் பலகை மட்டும் இருக்கும்; மரம் இருக்காது. அந்நிலையை மாற்றி, வெறும் சொல்லாக இல்லாமல், செயலாக சாதனை படைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
05-ஜூன்-202323:13:20 IST Report Abuse
RADE கோவைல இந்த வானதி ஸ்ரீனிவாசன் என்ன பண்ணுறாங்க, எதோ ஒரு இயக்கம் சிறுதுளினு சொல்லி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X