ஈரமான இதயங்களை இணைத்த கோவை நிகழ்வு
Added : ஜூன் 05, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
A Coimbatore event that connected wet hearts   ஈரமான இதயங்களை இணைத்த கோவை நிகழ்வு

கோவை:ஒடிசா ரயில் விபத்தில் பலியான சொந்தங்களுக்கு, தீபாஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் நேற்று 'தினமலர்' சார்பில் நடந்த நிகழ்வுகளில், ஏராளமானோர் இதய அஞ்சலி செலுத்தினர். காயமுற்றோர் விரைந்து குணமடைய பிரார்த்தனையும் செய்தனர்.


ஒடிசா மாநிலத்தில், மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில், 275பேர் உயிரிழந்தனர். 900 பேர் படுகாயம் அடைந்து, வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம், மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகெங்கும் இருந்து இரங்கல் செய்திகள் குவிகின்றன.

ரயில் விபத்து தொடர்பான படங்களும், செய்திகளும், காண்பவர், கேட்பவர்களை கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் உள்ளன. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி, காயமுற்றோர் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்யும் நிகழ்வு, 'தினமலர்' சார்பில் கோவையில் நேற்று நடந்தது.

வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த நிகழ்வில், அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏற்றி இதய அஞ்சலி செலுத்தினர். ஒரு நிமிடம் மவுனம் அனுசரித்து பிரார்த்தனை செய்தனர்.

மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கவுன்சிலர் சுமா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செந்தில் அண்ணா, பாரதிதாசன், விஜய் பார்க் இன் ஹோட்டல் உரிமையாளர் கோவை ரமேஷ், ரோட்டரி கிரீன் சிட்டி தலைவர் சுரேஷ் குமார், கிரில் அசோசியேசன் தலைவர் ரவி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், சி4டிஎன் அமைப்பின் மணியன், பாரதமாதா நற்பணி அறக்கட்டளை தலைவர் கவுரி சங்கர், புத்தக வியாபாரிகள் சங்க செயலாளர் காளியப்பன், கோவை கோல்டுஸ்மித் சங்க தலைவர் கமலஹாசன், ரோட்டரி சங்க நிர்வாகி ஸ்ரீனிவாசன், கோவை மளிகை வியாபாரிகள் சங்க நிர்வாகி கணேசன் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ''இந்த துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம் அனைவரது அஞ்சலி ஒன்றே ஆறுதலாக அமையும். காயமுற்றவர்கள் விரைந்து குணம் பெற இறைவனை பிரார்த்தனை செய்வோம்,'' என்றார்.

ஒடிசா ரயில் விபத்து யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, இறைவன் அருள் புரிய வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி நடக்க கூடாது.

-- கஸ்துாரி, 72, சித்தாபுதுார்

ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்திருக்க கூடாத ஒரு சம்பவம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த உயிரிழப்பு மிகவும் வருத்தத்துக்குரியது.இதுபோல் இனிமேல் நடக்காத வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - கங்காதரன், 76, ஒண்டிபுதுார்

இத்துயர சம்பவம் இனி நடக்க கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

- தண்டபாணி, 59, ஹோப் காலேஜ்



ரயில் நிலையத்தில் அஞ்சலி




முன்னதாக, நேற்று மதியம் கோவை ரயில் நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 'தினமலர்' நாளிதழ் மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் பவன் குமார் வர்மா, ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஸ்ரீதரன், ரயில்வே அலுவலர் கள், ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பயணிகள், பொது மக் கள் என ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X