சொட்டு நீர் பாசனத்திற்கு ஆயத்தமாகும் விவசாயிகள் கடும் வறட்சி எதிரொலி
Added : ஜூன் 05, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 Severe drought echoes farmers preparing for drip irrigation   சொட்டு நீர் பாசனத்திற்கு ஆயத்தமாகும் விவசாயிகள் கடும் வறட்சி எதிரொலி



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கோமுகி, மணிமுக்தா அணைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் விவசாய பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இப்பகுதியில் கரும்பு, நெல், மக்காச்சோளம், மரவள்ளி, மஞ்சள், உளுந்து, வேர்க்கடலை உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பருவ மழையின் போது நிலத்தடி நீர் மட்டம் வழிவகுத்து கிணற்று நீர் பாசனம் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.

கடும் வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறையும் போது, கிணறுகளில் தண்ணீர் மட்டமும் வெகுவாக குறைகிறது. அத்தருணத்தில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திடும் பொருட்டு விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயிள் பயிரிட்டு வருகின்றனர்.

சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு அரசு சார்பில் மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. கள்ளக்குறிச்சி பகுதியில் கரும்பு, மஞ்சள், மரவள்ளி, பருத்தி உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிரிடப்பட்டு வருகிறது.

இந்த முறையை பயன்படுத்தி பயிர் செய்வதன் மூலம் நீர் ஆவியாகுதல் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வேர் பகுதியில் தண்ணீர் சொட்டுவதால் பயிர் ஆரோக்கியமாகவும், அதிகளவு விளைச்சலும் கிடைக்கும்.

தற்போது நிலவும் வறட்சியால் கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல், காரனுார், சிறுவங்கூர், தென்கீரனுார், தச்சூர், வாணியந்தல், சோமண்டார்குடி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X