பெண் எரித்துக் கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்
Added : ஜூன் 05, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Police stumped for no clue in womans murder case   பெண் எரித்துக் கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்



சங்கராபுரம்,-சங்கராபுரம் அருகே இளம் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 மாதங்கள் ஆகியும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கிராம ஏரி அருகே கடந்த மார்ச் 30ம் தேதி காலை இளம்பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பெண்ணின் பிரேதத்தை கைபற்றி வழக்குப்பதிவு செய்தனர்.

இறந்த பெண் யார், எதற்காக எரித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்த எஸ்.பி., தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக பல்வேறு கோணங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அந்த பெண் அணிந்திருந்த ஆபரணங்களை வெளியிட்டும் எவ்வித துப்பும் இதுவரை கிடைக்கவில்லை.

இதனால், மாவட்ட காவல் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இறந்த பெண் குறித்த துண்டு பிரசுரங்கள் அனுப்பி தங்கள் கிராமத்தில் இதுபோன்ற அங்க அடையாளம் உள்ள பெண் காணாமல் போயிருந்தால் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி காவல்துறை துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X