'அரசு பஸ்களில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்'
Updated : ஜூன் 05, 2023 | Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கோவை: பள்ளிகள், வரும் 7ம் தேதி திறக்கப்படும் சூழலில், 'அரசு பஸ்களில், அடையாள அட்டையின்றி, மாணவர்கள் சீருடையில் கட்டணமின்றி பயணிக்கலாம்' என, கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



வரும் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பஸ் பயண அட்டைகளுக்கான விபரங்கள் அச்சடித்து, லேமினேசன் செய்து வழங்குவதற்கான பணிகள் தற்போது நடக்கின்றன.

அதனால், கோவையில் இயங்கும் அரசு டவுன், மப்சல் மற்றும் சிகப்பு நிற சிறப்பு பஸ்களில் பள்ளி சீருடைகளில், பள்ளி மாணவ, மாணவியர் பயணிக்கலாம் அல்லது கடந்தாண்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு இசைக்கல்லுாரி, அரசினர் கட்டட மற்றும் சிற்பக்கல்லுாரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பவர்கள், அக்கல்வி மையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அரசு போக்குவரத்துக்கழகத்தால் கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டையை, நடத்துனர்களிடம் காண்பித்து அரசு பஸ்களில் பயணிக்கலாம்.

அரசின் இந்த அறிவுறுத்தல்களை மீறி, மாணவ, மாணவியர் அடையாள அட்டை வைத்திருந்தும் மாணவர்களை பஸ்ஸில் இருந்து பயணிக்க அனுமதிக்காமல் இறக்கி விடப்பட்டால், அந்த நடத்துனர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ஸ்ரீதரன் கூறுகையில், ''அரசு அறிவுறுத்தலின்படி, மாணவ, மாணவியர் அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணிக்கலாம். இதற்கென்று கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை. கட்டணமில்லா பயண அட்டை வழங்கும் வரை இந்த சலுகை பொருந்தும். அதன் பின் இலவச பயண அட்டையை காண்பித்து பயணிக்கலாம்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
05-ஜூன்-202311:26:15 IST Report Abuse
அப்புசாமி இப்பிடியே ஓசி குடுத்து மாணவர்களை இலவசங்களுக்கு பழக்கி விடுங்கள். பின்னாடி கழகங்களுக்கு இட்டு போட்டு உருப்படாம போகலாம்.
Rate this:
Cancel
ஆக .. - Chennai ,இந்தியா
05-ஜூன்-202310:28:59 IST Report Abuse
ஆக .. பைக்குல போறது தானே பிடிக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X