ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் பழுதால் ஆறு மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
1914ல் பாம்பன் கடலில் அமைத்த ரயில் பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தில் உள்ள தூண்கள், இரும்பு பிளேட்டுகள் பலவீனமாகி 2022 நவ., 23 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.
இந்நிலையில் ரூ. 525 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நடந்து வரும் சூழலில் கடந்த 6 மாதமாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து இன்றி சென்னை, கோவை, திருப்பதி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மதுரை, திருச்சியில் இருந்து வரும் பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.
இங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ, வாகனங்களில் பெரும் சிரமத்துடன் ராமேஸ்வரம் வந்திறங்குகின்றனர். எனவே புதிய ரயில் பாலம் கட்டுமான பணியை முடித்து இந்தாண்டு இறுதிக்குள் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
அறிவிப்புகள் இல்லாமால் ரயில் நிர்வாகம் செய்த பிழை. தகுந்த ஏர்பாடுகள் செய்வதில் சுணக்கம். பழைய மாதிரி அவுட் ஏஜென்சி மாதிரி இணைப்பு பேருந்துகள் யேஆக்ற்பாடு செய்திருக்கலாம். மற்றதற்கெல்லாம் மார் தட்டி குழு ரயில் நிர்வாகம் இதில் சறுக்கியிருக்கிறது
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.