தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்க்கும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் நெல் நாற்றங்கால் அமைக்க தயக்கம்
Added : ஜூன் 05, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 118.45 அடியாக உள்ள நிலையில் தமிழக விவசாயிகள் சாகுபடிக்காக அணையில் தண்ணீர் திறந்து விட்ட போதிலும், தென் மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து நெல் நாற்றங்கால் அமைக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். அணையில் நீர் இருப்பை பொறுத்து திறக்கும் தேதி மாறுபடும். நீர்மட்டம் 112 அடிக்கு மேல் இருந்தால் சாகுபடிக்கு நாற்றங்கால் வளர்க்க தண்ணீர் திறக்கலாம் என்ற நடைமுறை உள்ளது. இந்தாண்டு 118.45 அடியாக இருந்ததால் ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.



எதிர்பார்ப்பு




தென்மேற்கு பருவமழை பெய்து நீர்மட்டம் வெகுவாக உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் இதுவரை தென்மேற்கு பருவ மழைக்கான அறிகுறியே இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக அணையில் ஜூன் 1ல் தண்ணீர் திறக்கும் போது நீர்மட்டம் 130 அடிக்கும் மேல் இருந்தது. இதனால் இருபோக நெல் சாகுபடியையும் முழுமையாக செய்ய முடிந்தது.



தயக்கம்




இந்நிலையில் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடையாததால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் நாற்றுகள் வளர்ப்பதற்கான நாற்றங்கால் அமைப்பதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 118.45 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 194 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு 200 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 2348 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X