இன்ஸ்பெக்டர்களுக்கு 'பிடிவாரன்ட்'
Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


நாமக்கல்; வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத, இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், 2020ல், இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றினார். அப்போது, 2020 முதல், 2022-ம் ஆண்டு வரை நடந்த சாலை விபத்து வழக்குகள் தொடர்பாக, அவர் சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன், இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை, வரும், 8ல், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், தற்போது, சிவகங்கை மாவட்ட தெற்கு கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இதேபோல், 2015ல், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அங்கு நடந்த வழக்கு ஒன்றியில், சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் இதுவரை, அவர் ஆஜராகவில்லை. அதையடுத்து, நாளை (ஜூன், 6), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, இன்ஸ்பெக்டர் வளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
05-ஜூன்-202312:14:55 IST Report Abuse
அநாமதேயம் இந்த பிடிவாரண்ட் மட்டும் போதாது நீதிபதி அவர்களே.எதிர்மனுதாரருக்கு இந்த மாதிரி ஆட்களின் சம்பளம் பிடித்தம் செய்து அவர்களின் அலைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.அப்போதுதான் இவர்கள் சட்டத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X