நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட மூவர் பலி
Added : ஜூன் 06, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Three people including the ambulance driver were killed in a four-vehicle collision   நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்  ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட மூவர் பலி



பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, டிராக்டர் மீது வேன் மோதியதில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, ஆம்னி பஸ் திடீரென மோதியதில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி, 60. இவர், தன் உறவினர்கள், 10 பேருடன், 'மேக்ஸி கேப்' வேனில், திண்டுக்கல்லிலிருந்து திருவண்ணாமலை சென்றார்.

அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் திண்டுக்கல் திரும்பிக்கொண்டிருந்தார். வேனை, திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்த செல்வராஜ், 55, என்பவர் ஓட்டினார்.

அந்த வேன் நேற்று அதிகாலை, 2:15 மணிக்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுார் மாவட்டம், செங்குணம் பிரிவு ரோடு அருகே வந்தது.

அப்போது, முன்னால் சென்ற டிராக்டரை முந்தும்போது, டிராக்டரில் வேன் மோதியது. இதில், 'மீடியனில்' வேன் ஏறி நின்றது; டிராக்டர் சாலையின் இடதுபுறம் கவிழ்ந்தது.

டிராக்டரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம், பொந்தமல்லியைச் சேர்ந்த கிழவன், 45, உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பெரம்பலுார் ஆம்புலன்ஸ் வந்து, விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முயன்றது.

அதன் டிரைவர் பெரம்பலுார் மாவட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், 45, ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது, சென்னையிலிருந்து, திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீ எஸ்.எம்.எஸ்., டிராவல்ஸ் என்ற ஆம்னி பஸ், திடீரென ஆம்புலன்சின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியது.

இதில், ஆம்புலன்ஸ் வாகனம், 1 கி.மீ., தானாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன், வேனில் பயணம் செய்தவர்களான திண்டுக்கல் நாகல் நகர் பகுதியைச் குப்புசாமி, 60, அவரது பேத்தியான சுப்ரமணி மகள் கவிப்பிரியா, 22, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

இந்த விபத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, ஆம்னி பஸ் டிரைவர் திருநெல்வேலியைச் சேர்ந்த சுடலை, 42, வேன் டிரைவர் செல்வராஜ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மறியல்: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இதையறிந்து, மருத்து வமனை முன் திரண்ட அவரது குடும்பத்தினர் அவரது உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X