ஸ்ரீமதி வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் தாயாரிடம் வழங்க கோர்ட் உத்தரவு
Added : ஜூன் 06, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



விழுப்புரம் : கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் உள்ளிட்ட ஆவணங்களை, அவரது தாயாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

கடலுார் மாவட்டம், பெரியநெசலுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி, 17; இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

பள்ளி விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

அவரது தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு பிறகு, கடந்த மே மாதம் 15ம் தேதி 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.

அதில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை, வழக்கிலிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கம் செய்திருந்தனர். வழக்கின், குற்றப்பிரிவுகளும் மாற்றம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், ஜூன் 5ம் தேதி காலை, நேரில் ஆஜராகி கருத்தை தெரிவிக்கும்படி, ஸ்ரீமதியின் தாய் செல்விக்கு, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து, வழக்கறிஞர்கள் ரத்தினம், லுாசியா, காசி விஸ்வநாதன் உள்ளிட்டோருடன், நேற்று காலை, ஸ்ரீமதியின் தாயார் செல்வி, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது, இந்த வழக்கில் ஆட்சேபனையை தெரிவிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, முதலில் வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கின் ஆவணங்கள், சாட்சி பதிவுகள் ஆகிய முழு விபரத்தை அளிக்க வேண்டும்.

ஸ்ரீமதி, அவரது மாமா செல்வம் ஆகியோர் பயன்படுத்திய மொபைல் போன்களையும் ஒப்படைக்க வேண்டும் எனவும், செல்வி தரப்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, ஸ்ரீமதியின் தாய் கேட்டுள்ள குற்றப்பத்திரிகை நகல் ஆவணங்களை ஒப்படைக்கும்படி சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நேற்று மாலை உத்தரவிட்டார்.

அதன்படி, குற்றப்பத்திரிகை நகல் உள்ளிட்ட முழு ஆவணங்களும், கோர்ட் மூலமாக வரும் 12ம் தேதிக்குள் செல்வியிடம் வழங்க, சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X