ஊட்டி: ''தேசிய
கல்வி கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க
நடவடிக்கை எடுக்கப்படுள்ளது,'' என, துணை வேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ரவி
பேசினார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ் பவனில் 'உயர்கல்வி
நிறுவனங்களின் பாடப்புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது' என்ற
தலைப்பில், மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்
பங்கேற்ற மூன்று நாள் மாநாடு நேற்று துவங்கியது.
அதனை துவக்கி வைத்து தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:
கடந்த,
10 ஆண்டுகளில் நம் நாட்டின் உள் கட்டமைப்புகள் அனைத்து மேம்பட்டுள்ளது.
இதனால், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
உலக அளவில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் வளர்ச்சியில், மூன்றாவது இடத்திற்கு நம்நாடு வளர்ந்துள்ளது.
நாடு
முழுவதும் 'டிஜிட்டல்' மையமாகியுள்ளதால், பன்னாட்டு நிறுவனங்கள் நம்
நாட்டில் முதலீடு செய்ய முன் வருகின்றன. திறன் வாய்ந்த மனித வளத்தை
உருவாக்கினால் மட்டுமே அன்னிய முதலீடுகளை கவர முடியும்.
நாட்டில்
உள்ள பிற மாநிலங்கள், தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னறியுள்ளது.
தமிழக கல்வி முறை இளைஞர்கள் திறன் மேம்பாடு அடையும் வகையில் மாற்றம்
செய்ய வேண்டும். மாநில அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை
வேந்தர்கள் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க
ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தேசிய கல்வி கொள்கை
அடிப்படை
கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் அளிக்க
வேண்டும். பாலிடெக்னிக் கல்லுாரி, ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பொறியியல்
பட்டதாரிகளை விட நல்ல பணி கிடைகிறது. இதனால், குறைந்த ஊதியத்தில் பொறியியல்
மாணவர்கள் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர்.
இன்றைய
காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு ஏற்ற கல்வி கிடைக்காததால் அவர்களின் திறன்
பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வியில் மாற்றம் அவசியம். நமது தேசிய கல்வி
கொள்கையில் இளைஞர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்ற கல்வி வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.