நிலுவை மனுக்களுக்கு தீர்வுகாண அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
Added : ஜூன் 06, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட, 312 மனுக்கள் வரப்பெற்றன. தொடர்புடைய துறையினரிடம் வழங்கி, விசாரித்து தீர்வு காண உத்தரவிடப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரு பயனாளிகளுக்கு காதொலி கருவி, ஒருவருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, 2,000 ரூபாய்க்கான ஆணை வழங்கப்பட்டது.
காது கேளாதோர் அகில இந்திய தடகள போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்ற, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது யாசின், இரு தங்க பதக்கம் வென்றார். மாநில அளவிலான போட்டியிலும் முகமது யாசின், சண்முகசுந்தரம் ஆகியோர், தங்கம் மற்றும் நான்கு வெள்ளி பதக்கங்களை வென்றனர். இருவரையும் கலெக்டர் பாராட்டி கவுரவித்தார்.
அதிகாரிகள் மத்தியில் கலெக்டர் பேசியதாவது:
மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மேலான மனுக்கள், தீர்வு காணப்படாமல் உள்ளன. சில துறைகளில், 300 நாட்களை கடந்த மனுக்களும் உள்ளன.
அவற்றுக்கு விரைவான தீர்வு காணுங்கள். மக்கள் குறைதீர் கூட்டம் தொடர்பாக மாதம் ஒரு கூட்டம் நடத்தப்படும் அக்கூட்டத்துக்கு வரும் அதிகாரிகள், உரிய ஆவணங்கள், விபரங்களுடன் வர வேண்டும்.
சமீபத்தில் நடந்த ஜமாபந்தியில் அதிக எண்ணிக்கையில் பட்டா மாறுதல், அளவீடு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு மனுக்கள் வந்தன. அவற்றை வி.ஏ.ஓ.,க்கள் - நில அளவையாளர் போன்றோர் ஒருங்கிணைந்து விரைவில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X