மன்னார் வளைகுடா கடலில் அழிவின் விளிம்பில் டால்பின்
Added : ஜூன் 06, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 Dolphin on the brink of extinction in the Gulf of Mannar   மன்னார் வளைகுடா கடலில் அழிவின் விளிம்பில் டால்பின்

வாலிநோக்கம்:-மன்னார்வளைகுடாவில் ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் அழிவின் விளிம்பில் டால்பின்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மன்னார் வளைகுடாவில் தனுஷ்கோடி முதல் ரோஜ்மா நகர் வரையிலான ராமநாதபுரம் மாவட்டத்தின் நீண்ட நெடிய கடற்கரைப்பகுதி 130 கி.மீ.,க்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கிறது.

இயற்கை பாதுகாப்பு அரணாக கடல் பவளப்பாறைகள் காணப்படுகின்றது. மண்டபம், கீழக்கரை, சாயல்குடி வனச்சரகத்தில் 21 தீவுகள் உள்ளன. கடலில் இருந்து 4 முதல் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் இவை அமைந்துள்ளது.மன்னார் வளைகுடா பகுதியில் தீவுகளை ஒட்டிய இடங்களில் அரியவகை டால்பின்கள் காணப்படுகின்றன. ஒரு சில தடை செய்யப்பட்ட வலைகளை விரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள மீனவர்களால் டால்பின்கள் அழிவை சந்திக்கின்றன.இயற்கை வளம் பாதுகாக்கும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' சுருக்கு மடி, இழுவை மடி, கரைவலைகளை கடலுக்குள் மற்றும் தீவிற்கு மிக அருகில் விரிப்பதால் சிறு மீன்களை மட்டுமே உண்டு வாழும் டால்பின்கள் கூட்டமாக வந்து வலையில் மாட்டிக்கொண்டு இறக்கின்றன. டால்பின்களின் மகத்துவத்தை அறிந்த சில மீனவர்கள் அவற்றை மீண்டும் கடலுக்குள் விடுகின்றனர். அதை உணராதவர்களால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமை, கடல் பசு, டால்பின்கள் பெருக்கமும், வாழ்விடங்களும் அழிவை சந்திக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளில் 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் வலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளன. எனவே இதுகுறித்த விழிப்புணர்வை மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X