ரூ.1.07 கோடியில் நலத்திட்ட உதவி அமைச்சர் பொன்முடி வழங்கல்
Added : ஜூன் 06, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



விழுப்புரம்:விழுப்புரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

தாட்கோ மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 223 பேருக்கு 1.07 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு, தாட்கோ மூலம் தொழில் முனைவோர்களுக்கான வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், சுதந்திரமாக செயல்பட அதிநவீன உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று 223 பயானிகளுக்கு 1.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, துாய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,310 உறுப்பினர்கள் உள்ளனர். துாய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள், ஒவ்வொன்றாக நிறைவேற்றி கொடுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு உள்ளது. மக்களின் தேவைகளை, அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய சேர்மன்கள் வாசன், கலைச்செல்வி, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் மணிமேகலை, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, ஆவின் பொது மேலாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X