தஞ்சையில் சூறாவளியுடன் பலத்த மழை 500 ஏக்கர் நெல், வாழை பயிர்கள் சேதம்
Added : ஜூன் 07, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
500 acres of paddy and banana crops damaged by heavy rains with cyclone in Tanjore   தஞ்சையில் சூறாவளியுடன் பலத்த மழை 500 ஏக்கர் நெல், வாழை பயிர்கள் சேதம்

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் காற்றுடன் பெய்த மழையால், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில், அறுவடைக்கு தயாரான நெல் பயிர்களும், வாழை மரங்களும் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் பகல் முழுதும் வெயில் வாட்டியது. இரவு சூறாவளிக் காற்றுடன், பலத்த மழை பெய்தது.

இதனால், சூரக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 350 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் துார் வாரவில்லை.

இதனால், விளைநிலங்களுக்குள் மழை நீர் புகுந்து, மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்த நிலையில், வருவாய் இழப்பையும் சந்திக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு கூறினர்.



வாழை பாதிப்பு




இதேபோல, பலத்த மழையால், திருவையாறு, கடுவெளி, ஆச்சனுார், பனையூர், வைத்தியநாதன் பேட்டை பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், 40 நாட்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்கள், வேருடன் விழுந்து சேதமடைந்தன.

திருவையாறு பகுதிகளில், நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி செய்யும் சூழலில், 'நெல் சேதமடைந்தால் இழப்பீடு வழங்குவது போல, வாழைக்கும் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X