பகிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு 5 கி.மீ.,க்குள் வீடு கேட்கின்றனர் மக்கள்
Added : ஜூன் 07, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



சென்னை, பகிங்ஹாம் கால்வாய் புனரமைப்பிற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ள நிலையில், அதில் குடியிருப்பவர்கள், 5 கி.மீ., எல்லைக்குள் மாற்று வீடுகளை கேட்கின்றனர்.

சென்னையில் உள்ள பகிங்ஹாம் கால்வாய், வடக்கு, தெற்கு, மத்தியம் என மூன்று வகையாக நீர்வளத்துறையால் பிரிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வெள்ள தடுப்பு அறக்கட்டளை வாயிலாக, பகிங்ஹாம் கால்வாயை படிப்படியாக புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சோதனை முறையில், சுவாமி சிவானந்தா சாலை முதல் ராதாகிருஷ்ணன் சாலை வரை 2.90 கி.மீ.,க்கு கால்வாய் புனரமைக்கப்படவுள்ளது. இதற்காக, கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரப்படவுள்ளது. பின், கரைகளை பலப்படுத்தி பூங்கா மற்றும் பொழுதுபோக்கு படகு போக்குவரத்து துவக்கப்படவுள்ளது.

இப்பணிக்கு முதற்கட்டமாக 300 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்குவதற்கு முன், ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக, லாக் நகர், விக்டோரியா ஹாஸ்டல் பின்புறம், மாட்டாங்குப்பம், சிவராஜபுரம், ரோட்டரி நகர் ஆகிய இடங்களில், ஆக்கிரமிப்பு குடிசைகள் மற்றும் வீடுகளை பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.

நீர்வளத்துறை 2011ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, 1,189 ஆக்கிரமிப்பு குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன. இது தற்போது, இரு மடங்கு அதிகரித்துள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு, திருவொற்றியூர் அருகே கார்கில் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள, தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆனால், எழும்பூர் அல்லது பட்டினப்பாக்கத்தில் தங்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும் என ஆக்கிரமிப்பாளர்கள் கேட்டுள்ளனர். அங்கு வீடுகளை ஒதுக்க முடியாதபட்சத்தில், 5 கி.மீ., சுற்றளவில் ஏதாவது ஒரு இடத்தில் வீடுகளை வழங்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். சிலர் 3 கி.மீ., எல்லைக்குள் வீடு கேட்கின்றனர்.

இப்பிரச்னையில் தீர்வு காண்பதற்காக, சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, வருவாய் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் அடங்கிய பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X