சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்; மூன்று அமைச்சர்கள் பங்கேற்பு
Added : ஜூன் 07, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Road Safety Review Meeting; Three ministers participated   சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்; மூன்று அமைச்சர்கள் பங்கேற்பு



கடலுார் : கடலுாரில் நடந்த சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்.பி., ராஜாராம், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். இதில், கடலுார் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பாக நெடுஞ்சாலை துறை, பள்ளிக்கல்வித்துறை, வட்டார போக்குவரத்து துறை, காவல் துறை, மக்கள் நல்வாழ்வு துறை ஆகிய 5 துறைகள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, சாலை பாதுகாப்பில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், 269 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 362 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம், கணேசன் வழங்கினர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், சிந்தனைச்செல்வன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை பொறியாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X