மதுவில் விஷம் கொடுத்து பூஜாரியை கொலை செய்தவர் கைது
Added : ஜூன் 07, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
The man who poisoned the wine and killed the priest was arrested  மதுவில் விஷம் கொடுத்து பூஜாரியை கொலை செய்தவர் கைது

மேலூர்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே கிடாரிப்பட்டியில் உறவினரை மதுவில் விஷம் கொடுத்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கிடாரிப்பட்டி பனையன் 45, பெரியநாச்சியம்மன் கோயில் பூஜாரி. இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக பெயின்ட் அடிக்கும் பணியில் உப்போடைப்பட்டி பனையன், வீரணன் 42, கிடாரிப்பட்டி கருவா மொண்டி 43, வேலை பார்த்தனர். ஜூன் 2 ல் வீரணன் வாங்கி வந்த மதுவை மூவரும் குடித்தனர். கருவாமொண்டி, வீரணன் இருவரும் வீட்டிற்கு சென்றனர். சற்று நேரத்தில் மது அருந்திய இடத்தில் பனையனும் வீட்டில் கருவாமொண்டியும் மயக்கமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பனையன் இறந்தார். கருவாமொண்டி சிகிச்சை பெற்று வருகிறார்.

பனையன் மனைவி கருத்தழகி மேலவளவு போலீசில் புகார் அளித்தார். மேலவளவு போலீசார் விசாரித்தனர். இதில் வீரணன் மதுவில் பூச்சி கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. வீரணனிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் மதுவில் விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டார்.

கொலை குறித்து போலீசார் கூறியதாவது: மது குடித்த மூவரில் வீரணனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருவாமொண்டியிடம் விசாரித்த போது மதுவை வாங்கி வந்து வீரணன் கலந்து கொடுத்தாக கூறினார். ஆனால் வீரணன் தான் மது வாங்கி மட்டும் கொடுத்ததாக கூறினார். சந்தேகம் ஏற்படவே தீவிரமாக விசாரித்தோம்.

பத்து நாட்களுக்கு முன் வீரணன் அம்மா இறந்தார். கிடாரிப்பட்டி கோயில் கும்பாபி ஷேகத்திற்கு காப்பு கட்டியதால் துக்க நிகழ்ச்சியில் பூஜாரி பனையன் மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை. அம்மா இறப்பில் பனையன் கலந்து கொள்ளாததோடு சீரும் கொண்டு வரவில்லை என்பதால் ஆத்திரமடைந்த வீரணன் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Anand - chennai,இந்தியா
07-ஜூன்-202311:09:41 IST Report Abuse
Anand பனையன், வீரணன், கருவா மொண்டி, கருத்தழகி இவை எல்லாம் சங்ககால தமிழ் பெயர்கள் போல தோன்றுகிறது...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-ஜூன்-202308:57:20 IST Report Abuse
duruvasar பகுத்தறிவைப்பற்றி புரியாதவர்கள் இந்த செய்தியை படித்து தெளிவு பெறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X