2 ஆண்டுகளில் யானையால் உயிர்பலி இல்லை: வால்பாறை வனத்துறையினர் நிம்மதி
Updated : ஜூன் 07, 2023 | Added : ஜூன் 07, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

வால்பாறை: வால்பாறையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் யானை தாக்கி யாரும் பலியாகவில்லை. இதனால், வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், ஜூன் மாதம் தென்மேற்குப்பருவ மழை பொழியும். வன வளம் பசுமைக்கு திரும்பியதும், கேரள வனப்பகுதியில் இருந்து யானைகள், வால்பாறைக்கு வரும்.

தொடர்ந்து 10 மாதத்திற்கு மேலாக இந்த யானைகள் வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனியாக முகாமிடுகின்றன. யானைகள் பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிடுகின்றன. இரவு நேரத்தில் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகள், வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துகின்றன.



latest tamil news



இந்நிலையில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களில் கடந்த, 1994 முதல் 2021 வரையில் யானை தாக்கி, 48 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் (மே மாதம் வரை) வால்பாறையில் யானை தாக்கி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதனால், வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் இயற்கை பாதுகாப்பு அமைப்பு, வனத்துறையினருடன் இணைந்து செயல்படுவதால் சமீப காலமாக, வனவிலங்கு - மனித மோதல் வெகுவாக குறைந்துள்ளது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி குறித்து பொதுமக்களுக்கு 'வாட்ஸ்ஆப்' வாயிலாக முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அதே போல் யானைகள் நடமாடும் பகுதியில், வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் முன் கூட்டியே சென்று, யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பதால், வால்பாறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யானை தாக்கி யாரும் பலியாகவில்லை.
இவ்வாறு, தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X