சேந்தமங்கலம்: புதன்சந்தை மாட்டு சந்தையில் காளை மாடுகளின் வரத்து அதிகரித்து, 2.25 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை மாட்டு சந்தை, வாரம்தோறும் செவ்வாய்கிழமை காலை, 5:00 மணிக்கு துவங்கி, மாலை, 3:00 மணி வரை நடக்கிறது. இந்த வாரம் காளை மாடுகளின் வரத்து அதிகரிப்பால், இறைச்சி மாடுகளின் விலை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. இறைச்சி பசு மாடுகளின் விலை, 22,000 முதல், 27,000 ரூபாய் வரை விற்பனையானது.
எருமை மாடுகளின் விலை, 32,000 முதல், 47,000 ரூபாய்க்கும், கன்று குட்டிகளின் விலை, 8,000 முதல், 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. காளை மாடுகள், வளர்ப்பு பசு, வத்தகறவை, பால் மாடுகளின் விலை, 30,000 முதல், 43,000 ரூபாய்க்கும், வளர்ப்பு பசு, எருமை கன்று குட்டிகளின் விலை, 9,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்தவாரம் மாட்டு சந்தையில் காளை மாடுகளின் வரத்து அதிகரித்து, விலை உயர்ந்ததால், 2.25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கேரளா, பெங்களூரு, ஆத்துார், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, மாடுகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள், விவசாயிகள் அதிகளவில் வந்திருந்தனர்.