போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்றால் உரிமம் ரத்து: வேளாண் அதிகாரி எச்சரிக்கை
Added : ஜூன் 07, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


நாமக்கல்: 'போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்' என, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி
எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், நெல், கரும்பு, மக்காச்சோளம், சோளம், பருத்தி, தென்னை, வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு, அதிகளவில் இயற்கை உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் (டிரைக்கோ விரிடி, சூடோமோனாஸ், மெட்டாரைசியம், பிவேரியா, டிரைக்கோகிரம்மா, கிரைசோபெர்லா) ஆகியவை, வேளாண் துறையின், அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதன் மூலம், நிலம் மற்றும் சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்ப்பதோடு, மண் வளத்தை மேம்படுத்துவதுடன், உற்பத்தி செலவையும் குறைக்கலாம். மேலும், நஞ்சில்லா உணவையும் மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியும். அதனால், விவசாயிகள் வேளாண் துறை மூலம் தங்கள் வயல்களில் மண் பரிசோதனை செய்து பரிந்துரைக்கப்படும், அளவிற்கு மிகாமல் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும்.
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கும்போது, உரிமம் பெற்ற உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களிடம், உரிய விற்பனை ரசீது பெற்று வாங்க வேண்டும். போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தாலோ அல்லது அதிக விலைக்கு விற்றாலோ, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X