திருவொற்றியூர், திருவொற்றியூர், இந்திராகாந்தி நகர், கே.சி.பி., சாலையைச் சேர்ந்தவர் முருகன், 23. இவர், 5ம் தேதி மாலை, தேரடி, மேற்கு மாடவீதி, முகுந்தம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றார்.
அப்போது, அவரை வழிமறித்த நான்கு பேர் கும்பல், சரமாரியாக வெட்டி தப்பியது. படுகாயமடைந்த முருகனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர்.
இதுதொடர்பாக, திருவொற்றியூர், பாலகிருஷ்ணா காலனியைச் சேர்ந்த சரவணகுமார், 20, சாந்தகுமார், 27, ஆனந்த், 22, சுபாஷ், 21, ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், முருகனுக்கும், கைதான சரவணகுமாருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இதன் காரணமாக, சரவணகுமார் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. கைதான சரவணகுமார், சாந்தகுமார் மீது, ஏராளமான வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின், நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை, கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கவுஸ் பாஷா, 23. கடந்த, 5 ம் தேதி, அம்பேத்கர் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த இருவர், கத்தியால் சரமாரியாக தாக்கி, தப்பினர். காயமடைந்த கவுஸ்பாஷா, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து, ஆர்.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன், 26, பிரகாஷ், 21, ஆகிய ரவுடிகள் இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.