ஆதாருடன் மனுதாரர் ஆஜராக பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



சென்னைகுரோம்பேட்டையைச் சேர்ந்த சாலமன் ராஜா, கடந்த 2021-ல் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 'தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை வீரராகவன் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏரிக்குள் கழிவு நீர் விடப்படுவதை தடுத்து, ஏரியை பாதுகாக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாயம், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, தாம்பரம் மாநகராட்சி மற்றும் வருவாய் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு, இந்த வழக்கு பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.

கடந்த ஏப்., 13ல் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் குறித்து குழப்பமான தகவல்களை, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால், மனுதாரர் சாலமன் ராஜாவை நேரில் ஆஜராக, தீர்ப்பாயம் உத்தரவிட்டது; அவர் ஆஜராகவில்லை.

எனவே, குரோம்பேட்டை, நியூ காலனியைச் சேர்ந்த மனுதாரர் சாலமன் ராஜா, அடுத்த விசாரணை நடக்கும், ஆக., 14ல் ஆஜராக வேண்டும்.

அப்போது, ஆதார் உள்ளிட்ட புகைப்பட அடையாள அட்டைகளை எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X