பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க கோரிக்கை
Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 Demand to prevent sea erosion in Pantinpakakkam area   பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க கோரிக்கை



பட்டினப்பாக்கம், சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில், கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கடலின் இயல்பு தன்மையும் மாறுகிறது. தொடர் கடல் அரிப்பால், மீனவ கிராமங்களில் கடல் நீர் புகும் அபாயம் உள்ளது.

கரையில் நிறுத்தி வைக்கப்படும் சிறிய நாட்டு படகுகள், கடலுக்குள் இழுத்து செல்லும் நிலையும், வலைகள் சேதமடையும் அபாயமும் இருப்பதாக, மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சில இடங்களில், பாறைகளை போட்டு, கடல் அரிப்பை தற்காலிகமாக தடுத்து வருகின்றனர்.

கடல் சுவர் எழுப்பவது, துாண்டில் வளைவு அமைப்பதே கடல் அரிப்பை தடுக்க முழு தீர்வாகும் என, அவர்கள் தெரிவித்தனர்.

அப்பகுதி மீனவர்கள் சிலர் கூறியதாவது:

கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமி மற்றும் அதைத்தொடர்ந்து வீசிய புயல்கள், இயற்கை சீற்றங்களால் கடலின் இயல்பு தன்மை மாறியுள்ளது. 2011ம் ஆண்டில் தானே புயல் ஏற்படுத்திய சேதத்திற்கு பின், கடலின் தன்மை முற்றிலும் மாறி உள்ளது.

மீனவர்கள் கூட கடலின் குணத்தை கணிக்க முடியவில்லை. அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் கடலின் சீற்றம் அதிகம் காணப்படுகிறது. நிலப்பகுதியில் 10 அடி வரை கடல் நீர் புகுகிறது.

இதனால் மீன் பிடி தொழில் பாதிக்கிறது. மீனவ குடியிருப்புகளும் சேதமடைகின்றன. கடல் அரிப்பை தடுப்பதற்கு இப்பகுதியில் துாண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X