சலவை ஆலையில் வாயு கசிவு நெடியால் 20 பேர் மயக்கம்
Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
20 people fainted due to gas leak in laundry plant  சலவை ஆலையில் வாயு கசிவு நெடியால் 20 பேர் மயக்கம்

திருப்பூர்,:திருப்பூரில், 'காம்பாக்டிங், வாஷிங்' நிறுவனத்தில் வாயு கசிந்ததால், 20 பேர் மயக்கமடைந்தனர்.

திருப்பூர், வெங்கமேடு, திருக்குமரன் நகரில் செயல்படும் காம்பாக்டிங் மற்றும் வாஷிங் நிறுவனத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வாயு கசிந்து அப்பகுதியில் பரவியது.

நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த 15 சிறுவர் - சிறுமியர், மூன்று பெண்கள் உட்பட, 20 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் உள்ளிட்டோர் ஆலையில் ஆய்வு நடத்தினர்.

உடனடியாக மூன்று மருத்துவ குழு விரைந்து, அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மாசு கட்டுப்பாடு வாரியத்தினர், ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவு வெளியாகும் வரை, ஆலை இயங்க தடை விதிக்கப்பட்டது.

கமிஷனர் பவன்குமார் கூறுகையில், ''ஆலையில் வாயுக்கசிவு எங்கிருந்து ஏற்பட்டது; என்ன வாயு கசிந்தது என்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆய்வறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார். ஆலைக்கு சீல் வைக்கவும், மின் இணைப்பைத் துண்டிக்கவும் கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று இரவு உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X