பரமக்குடி மாணவி பலாத்கார வழக்கு கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ராமநாதபுரம்:-பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் பள்ளி 14 வயது மாணவியை அதே ஊரை சேர்ந்த பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் சிகாமணி 44, மறத்தமிழர் சேனை நிறுவன தலைவர் புதுமலர் பிரபாகரன் 42, ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது 39, ஆகியோர் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டனர்

இவர்களுக்கு உதவிய உமா மற்றும் கயல்விழி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இவர்கள் ஐந்து பேர் மீதும் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

கைதானவர்களை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்த பின் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சிகாமணி மட்டும் நிபந்தனை ஜாமினில் ஸ்ரீவில்லிபுத்துார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக இவர்கள் 5 பேரும் நேற்று ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் கயல்விழி தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.

விசாரித்த நீதிபதி கோபிநாத் 5 பேரையும் இன்று மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
08-ஜூன்-202304:09:11 IST Report Abuse
V.Saminatha சி பி சி ஐ டி கடந்த இருபது ஆண்டுகளில் கிடப்பில் போட்ட வழக்குகள் எத்தனை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X