நிதியின்றி தடுமாறும் 'அம்மா' உணவகங்கள் மூடுவிழாவை நோக்கி பயணம்
Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ராமநாதபுரம்:அம்மா உணவங்களுக்கு சமையல் பொருட்கள், பராமரிப்பு செலவிற்கான தொகை, ஊழியர் சம்பளம், என எதையும் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் வழங்கவில்லை. இதனால் அம்மா உணவகங்கள் மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 407 அம்மா உணவகங்கள் துவங்கப்பட்டது. இவற்றில் 4000 பேர் வேலை செய்கின்றனர். பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உட்பட முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாதம் ரூ.5, என குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. ஏழைகள் பசியாறுகின்றனர்.

அன்றாட சமையலுக்கு தேவையான பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்டவற்றிற்கு ஒரு உணவகத்திற்கு தினசரி ரூ.3200 வரை தேவைப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சிகள் இதற்கான தொகையை வழங்கின.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அம்மா உணவகங்களை பராமரிக்க அதிகாரிகள் முக்கியத்துவம் தருவது இல்லை. தற்போது மாநகராட்சி, நகராட்சிகள் அம்மா உணவகங்களுக்கு நிதி முறையாக வழங்கவில்லை.

அம்மா உணவகங்களில் பழுதாகும் மின்விசிறி, கிரைண்டர், மிக்சியை கூட சரிசெய்து தருவது இல்லை.

நகராட்சி அதிகாரிகள் கூறியது: அம்மா உணவகங்களுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்கிறோம். ஒரு உணவகத்திற்கு மாதம் ரூ. 1 லட்சம் தேவை. ஆனால் அந்த அளவிற்கு வருமானம் இல்லை. இருப்பினும் பொதுநிதியை பயன்படுத்தி தொய்வின்றி உணவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றனர்.

நிதி பற்றாக்குறை, பராமரிப்பின்மை போன்றவற்றால் மூடுவிழாவை நோக்கி அம்மா உணவகங்கள் பயணிப்பதாக பணியாளர்கள் புலம்புகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
08-ஜூன்-202304:07:07 IST Report Abuse
V.Saminatha இந்த அரசுக்கு டாஸ்மாக்ல கொள்ளையடிக்கிறதெப்படி-சரக்குல தண்ணியை ஊத்தி குடிமகனுக்கு பைத்தியம் பிடிக்க வைப்பது-மின்கட்மசத்தை ஆறு மாதத்துக்கொரு தடவை உயர்த்தி மக்களை விழிமிதுங்க வைப்பமு போன்ற கொள்ளுயடிப்பு வேலைகளே தெரியும்-அதோட மாடல் அப்படி-மக்கள் அடியில கையை வைச்சுக்கோங்க-இல்லைனா அதையும் புடுங்கிகிட்டு போய்டுவானுக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X