விபத்து வழக்கில் நஷ்டஈடு பாக்கி வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



செஞ்சி, விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட் ஊழியர்களால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன், 23; இவர் கடந்த 12.12.2011 அன்று, தனது இருசக்கர வாகனத்தில் ஆலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில், பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மணிகண்டனின் தந்தை முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனர். தனது மகன் இறப்பிற்கு நஷ்ட ஈடு கேட்டு முனுசாமி, வழக்கறிஞர் கிருஷ்ணன் மூலம் செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 4 .12.2018ம் தேதி, ரூ. 6 லட்சத்து 56 ஆயிரத்து 40 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் 2022ம் ஆண்டு வரை நஷ்ட ஈடு வழங்காததால், அப்போதைய நீதிபதி, மீண்டும் வட்டியுடன் சேர்த்து ரூ. 12 லட்சத்து 7 ஆயிரத்து 656 யை , பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க உத்தரவிட்டார்.

அப்போது கோர்ட்டில் செலுத்தி இருந்த டெபாசிட் தொகை உள்பட 10 லட்சத்து 70 ஆயிரத்து 983 நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. மீதி தொகை ரூ. ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 901 இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மீண்டும் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நலினகுமார், ரூ. ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 901 உடன் வட்டியும் சேர்த்து வழங்குமாறும், தவறினால் அரசு பஸ்ஸை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பஸ்சை, செஞ்சி கூட்டு ரோடில் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X