போலீஸ் செய்திகள்
Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



சிறை வார்டன் மீது வழக்கு

மதுரை: ஜெய்ஹிந்த்புரம் பாண்டியம்மாள் 65. இவரது கணவர் கண்ணன். இருவரும் வாங்கிய கடனுக்காக நில ஆவணங்களை தரமறுப்பதாக மதுரை சிறை வார்டன் செந்தில்குமார், ஜோசப் ஆரோக்கியசாமி, திருப்பதி மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் இருந்து ஓட்டம்

மதுரை: இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் 'வாழைப்பழ'சரவணகுமார் என்பவர் வழக்கு ஒன்றில் சரணடைந்தார். நீதிமன்ற காவலில் இருந்தபோது அங்கிருந்து தப்பினார். நீதிமன்ற ஊழியர் அமராவதி புகாரில் அண்ணாநகர் போலீசார் தேடி வருகின்றனர்.

பெயின்டருக்கு பாட்டில் குத்து

மேலுார்: நரசிங்கம்பட்டி பெயின்டர் வாஞ்சிநாதன் 22. இவருக்கும், அப்பகுதி உதயகுமார், முத்துபாண்டி, கார்த்திக்கும் பணம் கொடுங்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. நேற்றுமுன்தினம் சுடுகாடு பகுதியில் வாஞ்சிநாதனிடம் தகராறு செய்து பீர் பாட்டிலால் முகம், கையில் குத்தினர். எஸ்.ஐ., ஆனந்தஜோதி விசாரிக்கிறார்.

குட்கா, புகையிலை பறிமுதல்

திருமங்கலம்: ஆலம்பட்டி சின்னச்சாமி 38. இவரது வீட்டில் திருமங்கலம் தாலுகா போலீசார் சோதனை நடத்தி 12 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். சின்னசாமி கைது செய்யப்பட்டார். மேலும் திருமங்கலம் முனியாண்டி கோயில் சிவசேகர் என்பவர் வீட்டில் பதுக்கிய 5 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

தொழிலாளி பலி

கொட்டாம்பட்டி: மங்களாம்பட்டி விவசாய கூலித் தொழிலாளி சிவராமன் 22. நேற்று காலை 11:00 மணிக்கு டூவீலரில் மதுரை - மங்களாம்பட்டிக்கு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. தெற்குத்தெரு நான்கு வழிச்சாலையில் பின்னால் வந்த வாகனம் மோதியதால் சிவராமன் இறந்தார். மேலுார் எஸ்.ஐ., ஆனந்த ஜோதி விசாரிக்கிறார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X