கிடங்குகள் 'கமர்ஷியல்' கிடையாது: விரைவில் வகைப்பாடு மாற்றம்!
Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கிடங்குகளுக்கான கட் டட அனுமதியை விரைவு படுத்துவதற்காக, இவற்றை தொழில் கட்டடங்களாக வகைப்பாடு மாற்றும் நடவடிக்கைகளை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை துவக்கி உள்ளது.

நாடு முழுதும், தொழில் வளர்ச்சிக்கு இணையாக சரக்கு போக்குவரத்து துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப கிடங்கு வளாகங்கள் கட்டுதல், பராமரித்தல் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



latest tamil news



இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக கிடங்குகளுக்கான புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் இக்கொள்கையின் முக்கிய கூறுகள் இன்னும் அமலுக்கு வராமல் உள்ளன. இந்த விஷயத்தில் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழிற்சாலை கட்டட அனுமதி பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அரசு செயலர்கள் நிலையிலான கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கிடங்குகளுக்கு திட்ட அனுமதி பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.



வாய்ப்பு




இதன்படி, கிடங்கு களை, தொழில் நிறுவன கட்டட வகைப்பாட்டில் சேர்க்க வேண்டும் என்பதில் அதிகாரிகள் நிலையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இதனால், தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர முறையில் கிடங்குகளுக்கான கட்டட அனுமதி விரைவாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, வகைப்பாடு மாற்ற நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
duruvasar - indraprastham,இந்தியா
08-ஜூன்-202308:29:39 IST Report Abuse
duruvasar அரசியல் வாதிகள் கள்ள பணத்தை இங்கே பதுக்கி வைப்பதால் இதனை பணபெட்டகம் என வகைபடுத்தவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X