கரூர்: சாலைப்புதுார் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 35 லட்சம் ரூபாய்க்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில், 75.52 குவிண்டால் எடை கொண்ட, 20,949 தேங்காய் விற்பனைக்கு வந்தது. கிலோ அதிகபட்ச விலையாக, 21 ரூபாய், குறைந்தபட்ச விலையாக, 15 ரூபாய், சராசரி விலையாக, 19.95 ரூபாய் என மொத்தம், ஒரு லட்சத்து, 44 ஆயிரத்து, 836 ரூபாய் விற்பனையானது.
அதேபோல், 208.77 குவிண்டால் எடை கொண்ட, 441 மூட்டை கொப்பரை தேங்காய் விற்பனைக்கு வந்தது. முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ அதிகபட்ச விலையாக, 79.29 ரூபாய், குறைந்தபட்ச விலையாக, 72.99 ரூபாய், சராசரி விலையாக, 78.79 ரூபாய் விற்பனையானது. 2-ம் தரம் கொப்பரை தேங்காய் கிலோ அதிகபட்ச விலையாக, 76.05 ரூபாய், குறைந்தபட்ச விலையாக, 57.59 ரூபாய், சராசரி விலையாக, 74.25 ரூபாய் என மொத்தம், 14 லட்சத்து, 79 ஆயிரத்து, 464 ரூபாய்
விற்பனையானது.
மொத்தம், 136.61 குவிண்டால் எடை கொண்ட, 184 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ அதிகபட்ச விலையாக, 147.09 ரூபாய், குறைந்தபட்ச விலையாக, 136.59 ரூபாய், சராசரி விலையாக, 146.09 ரூபாய், சிவப்பு எள் கிலோ அதிகபட்ச விலையாக, 148.69 ரூபாய், குறைந்தபட்ச விலையாக, 126.09 ரூபாய், சராசரி விலையாக, 143.09 ரூபாய் என மொத்தம், 18 லட்சத்து, 78 ஆயிரத்து, 541 ரூபாய்க்கு விற்பனையானது.
சாலைப்புதுார் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் பொருட்கள் மொத்தம், 35 லட்சத்து, 2 ஆயிரத்து, 841 ரூபாய்
விற்பனையானது.