கரூர்: 'தீவனம் பயிரிட மானியம் பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்களை இந்தாண்டு கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்திட உள்ளது. 40 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் பொருட்டு, நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில், 0.50 ஏக்கர் முதல், 1 எக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர் ஊடுபயிராக பயிரிட்டு குறைந்தபட்சம், 3 ஆண்டு வரை பராமரிக்க ஏக்கருக்கு, 3,000 ரூபாய், ஹெக்டேருக்கு, 7,500 ரூபாய் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் கிராமத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதி
திராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம், 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள், 50 சதவீதம் மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக தேர்வு செய்யும் பயனாளிகள், 50 சதவீதம் பயனாளி
பங்குத்தொகை செலுத்த வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் வரும், 10ம் தேதிக்குள் விண்ணப்பம் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு, அதில், குறிப்பிடப்பட்டுள்ளது.